டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
அறைகுறை தமிழ்ப டித்தே
அருந்தமிழ் அறிஞன்
என்ற
நிறைகுடப் பெயரெ டுத்து
நிற்கின்ற என்னைப்
பார்த்துக்
குறைபலச் சொல்லு கின்றார்
குறுகிய மனத்தர்;
என்றன்
நிறைகளைச் சொல்லு கின்றேன்
நீங்களே நிறுத்துப்
பார்ப்பீர்;
தும்பைஏன் விட்டேன்? வாலைச்
சொடுக்கியே வீழ்த்திக் காட்டும்
தெம்பைநான் பெற்ற தாலே;
தெரியாதார் போற்கேட்
போரே!
கொம்பைஏன் விட்டேன்? முள்ளாய்க்
குளம்பிலே குத்திச் சாய்க்கும்
வம்படி வித்தை கற்று
வல்லமை படைத்த தாலே!
பார்க்கத்தான் முருங்கை; என்னைப்
பற்றிப்பார் புளியங் கொம்பு;
பார்க்கத்தான் சகுனி; வந்து
பழகிப்பார் சாணக் யன்நான்;
பார்க்கத்தான் வெறுங்கை; உள்ளே
பணத்தோட்டம் பூத்துக் காய்க்கும்;
ஆர்க்குத்தான் வாய்ந்த தென்போல்
அரசியற் சூதும்
வாதும்?
நன்முறை வழியில் அன்று
நாயகம் ஈழம்
கேட்டார்;
வன்முறை வழியில் நின்று
வாங்கவே புலிகள்
வேட்டார்;
என்முறை என்ன வென்றே
இங்குளார் என்னைப்
பார்த்துப்
பன்முறை கேட்ப தாலே
பகருகின் றேன்நான்
கேட்பீர்!
சீராடி தமிழர் நாட்டைச்
சிறப்பாக ஆண்ட
வன்நான்;
போராடி ஈழம் வென்றால்
புதுமையா? உரிமை
பேசிக்
கூராடிக் கொண்டால் உண்டா
கௌரவம்? நானோ
கங்கை
நீராடி ஈழம் வெல்வேன்
நீங்கள்பார்க்
கத்தான் போறீர்!
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக