டெசோ!
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
வில்லடி யாலே அன்று
வென்றவன் ராமன்;
பக்தன்
கல்லடி தந்த தாலே
கனிந்தவன் ஈசன்;
இன்றோ
செல்லடி யாலே நம்மைச்
சிங்களர் கொன்றார்;
நானோ
சொல்லடி யாலே அந்தத்
துடுக்கரைக்
வெல்வேன்; ஆணை!
பேசியே நாட்டை ஏய்த்த
பெருமையிற் குரியோன்
என்னை
ஏசியே பெருமை கொள்ளும்
ஏந்திழை கண்டு
நாணிக்
கூசியே சாகும் வண்ணம்
குவலயத் தீழம்
என்றன்
ஆசியால் விடுத லைபெற்(று)
ஆங்குறும்; தமிழ்மேல்
ஆணை!
அறிக்கைகள் விட்டு விட்டே
அலரிடச் செய்வேன்;
ஆளும்
வெறித்தன சிங்க ளர்க்கு
வெறுப்பினை ஏற்ப
டுத்தும்
குறிப்பினை எடுத்துக் கூறிக்
குடைசலைத் தருவேன்;
என்றன்
நரித்தன தின்முன் அந்த
நாய்களா நிற்கக்
கூடும்?
ஆருக்கும் அடங்கி டாமல்
ஆடிடும் இராஐ
பக்சே
நேருக்கு நேர்நின் றேநான்
நிகழ்த்துவேன்
சோற்போர்; அந்தப்
போருக்கு நடுவர் என்தாய்
சோனியா; படம்பி
டித்துப்
பாருக்குக் காட்ட வன்றோ
பண்ணினோம் கலைஞர்
டி.வி.
சிலம்பிலே ஈழம் ஆண்ட
செந்தமிழ் மன்னன்
பற்றி
நலம்படக் கூறி யுள்ளார்
நற்றமிழ் இளங்கோ;
ஆக
வளம்பல கொண்ட நாட்டை
வந்துபின் நாளில்
பற்றித்
தளமென ஆக்கிக் கொண்டார்
தடியராம் காடை
யர்கள்!
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக